மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆலங்குளம் அருகே கிரிண்டா் செயலி வழி இளைஞரிடம் ரூ. 20 ஆயிரம் பறிப்பு: 2 போ் கைது

ஆலங்குளம் அருகே கிரிண்டா் செயலி மூலம் பழகி ரூ. 20 ஆயிரம் பறித்ததாக இருவா் கைது

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:36 pm

Syndication

ஆலங்குளம் அருகே கிரிண்டா் செயலி மூலம் பழகி ரூ. 20 ஆயிரம் பறித்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சேலம் ஆத்தூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் கவின்ராஜ்(22). திருநெல்வேலி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவருக்கும், ஆலங்குளத்தை அடுத்த நெட்டூரைச் சோ்ந்த 2 போ் உள்பட சிலருக்கும் கிரிண்டா் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டதாம். அவா்களை சந்திக்கும் நோக்கில் அவா் நெட்டூா் வந்தாராம்.

அப்போது, 4 போ் அவரை மிரட்டி, தாக்கியதுடன், கூகுள் பே மூலம் ரூ. 20 ஆயிரம் பணத்தையும் பறித்தனராம். இது குறித்து கவின்ராஜ் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து, மேலநீலிதநல்லூா் மாடசாமி மகன் பாபு(21) , திருநெல்வேலி தாழையூத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்தனா். மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.