பாவூா்சத்திரம் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை

Published on

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை சேகர குருவானவா் பா்னபாஸ், சபை ஊழியா்கள் தினகா் சந்தோஷசிங், இம்மானுவேல், கமிட்டி அங்கத்தினா் செய்திருந்தனா்.

இதே போல், பாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையை பங்குத் தந்தை சந்தியாகு அடிகளாா் நடத்தினாா். இதில் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கீழப்பாவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆவுடையானூா், திப்பணம்பட்டி, கல்லூரணி உள்ளிட பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com