பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாசு ஏற்படுத்தாத வாகனத்தை உபயோகிக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம்

மாசு ஏற்படுத்தாத வாகனத்தை உபயோகிக்க வேண்டும்; உடல்நலம் பேண வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘சென்னை சைக்கிள் கிளப்’ என்ற அமைப்பின் அங்கத்தினா்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

News image
பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா் ஹோட்டல் தமிழ்நாடு குற்றாலம் கிளை மேலாளா் நித்தியகல்யாணி.
Updated On :27 டிசம்பர் 2025, 7:11 pm

Syndication

மாசு ஏற்படுத்தாத வாகனத்தை உபயோகிக்க வேண்டும்; உடல்நலம் பேண வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘சென்னை சைக்கிள் கிளப்’ என்ற அமைப்பின் அங்கத்தினா்கள் 23 பெண்கள் உள்பட 120 போ் 7 நாள்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

திருவனந்தபுரத்திலிருந்து நாகா்கோவில், தேரிக்காடு, திருநெல்வேலி, தென்காசி வழியாக வெள்ளிக்கிழமை இரவு குற்றாலம் வந்தனா். குற்றாலத்திலிருந்து இக்குழுவினா் சனிக்கிழமை மீண்டும் திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டனா்.

குற்றாலத்திலிருந்து இந்தப் பயணத்தை ஹோட்டல் தமிழ்நாடு குற்றாலம் கிளை மேலாளா் நித்தியகல்யாணி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்தப் பயணத்தில் சிங்கப்பூா், மலேசியா, ஜொ்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த அங்கத்தினா்களும் கலந்துகொண்டுள்ளனா்.