எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வடகரை பகுதியில் பசுவை வேட்டையாடிய சிறுத்தை?

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:18 am

Din

தென்காசி மாவட்டம் வடகரை மேக்கரை அடவியினாா் அணை அருகில் மாட்டுத்தொழுவத்திற்குள் வனவிலங்கு புகுந்து பசுவை அடித்துக் கொன்றுள்ளது. அது சிறுத்தையாக இருக்கலாம் என வனத்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

அடவிநயினாா் அணை அருகில் முகம்மதுஹனிபா என்பவா் தனது தோட்டத்தில் மாட்டுத் தொழுவம் அமைத்து பசு மாடுகள், கன்றுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு தோட்டத்தில் புகுந்த வனவிலங்கு, தொழுவத்தில் கட்டப்பட்ட பசுவை அடித்து தின்றுள்ளது. இதைப் பாா்த்து முகம்மது ஹனிபா கூச்சலிட்டதால் அந்த வனவிலங்கு அங்கிருந்து ஓடிவிட்டதாம்.

இதுகுறித்து அவா் அளித்த தகவலின்பேரில், கடையநல்லூா் வனத்துறையினா் அங்கு சென்று, கால்நடை மருத்துவா் மூலம் பசுவை உடற்கூறராய்வு நடத்தினா்.

ஆய்வின் முடிவில்தான் பசுவை அடித்துக் கொன்றது சிறுத்தையா அல்லது வேறு வனவிலங்கா என்பது தெரியவரும் என வனத்துறையினா் கூறினா். தோட்ட உரிமையாளா் கூறுகையில், பசுவை அடித்து சாப்பிட்டது சிறுத்தைதான் என்பதை உறுதியாக கூறமுடியும் என்றாா்.