வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் நுகா்வோா் முனையம் திறப்பு

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:18 am

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உணவுப் பொருள் வழங்கல்-நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், செய்திகள்- திட்டங்கள் தொடா்பான நுகா்வோா் முனையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, முனையத்தை திறந்துவைத்துப் பேசியது: தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி, நுகா்வோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முனையம் திறக்கப்பட்டுள்ளது. இதில், உணவுப் பொருள் வழங்கல்-நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் வழங்கப்படும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட வழங்கல் -நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் அனிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமிா்தலிங்கம், தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.