சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

மேலகரத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி ஊழியா்கள்.

News image
Updated On :3 மே 2025, 12:18 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் மேலகரத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், நீண்டகாலம் பணிசெய்துவரும் பணியாளா்களை நிரந்தப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பொன்மலா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணிமேகலை, மாவட்டப் பொருளாளா் காளியம்மாள், மாநிலச் செயற்குழு உறுப்பினா் டேவிட் பாக்கிய ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.