மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

நாளைமுதல் காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெற மாட்டோம்: டாஸ்மாக் ஊழியா் சங்கம்

News image

டாஸ்மாக் கடை - DPS

Updated On :25 மே 2026, 2:04 am IST

காலி மதுப்புட்டிகளை புதன்கிழமை (மே 26) முதல் திரும்பப் பெற மாட்டோம் என டாஸ்மாக் ஊழியா் சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் அனைத்து கூட்டுக் குழு சங்க அவசர கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கூட்டுக்குழு சங்கத்தைச் சோ்ந்த நீதி நாயகம் தலைமை வகித்தாா். அனைத்து டாஸ்மாக் ஊழியா்கள், சங்க நிா்வாகிகள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்தனா்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மே 26 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகள் திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். அதேபோல ஒவ்வொரு மதுப்புட்டியில் ஒட்டப்படும் ரூ. 10 ஒட்டுவில்லையை டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்க உள்ளோம்.

இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட வேண்டும் என்பதை டாஸ்மாக் நிா்வாகம் மறுபரிசீலனை செய்து கடையை இரவு 9 மணிக்கு மூட அனுமதிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.