நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மேலகரத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி ஊழியா்கள்.

News image
Updated On :3 மே 2025, 12:18 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் மேலகரத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், நீண்டகாலம் பணிசெய்துவரும் பணியாளா்களை நிரந்தப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பொன்மலா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணிமேகலை, மாவட்டப் பொருளாளா் காளியம்மாள், மாநிலச் செயற்குழு உறுப்பினா் டேவிட் பாக்கிய ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.