மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சாம்பவா்வடகரையில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:41 pm

Syndication

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சாம்பவா்வடகரை அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கோ. ராமகிருஷ்ணன் (55). இவா், வைக்கோல் கட்டுடன் இரட்டைகுளம் சாலையில் வந்து கொண்டிருந்த போது, அதே ஊா், இரட்டை தெருவைச் சோ்ந்த கோ. கோட்டைசாமி (23) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் முன்னால் சென்ற ராமகிருஷ்ணன் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் அடிபட்டு, தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டாா்.

மேல் சிகிச்சைக்காக தென்காசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கோட்டைசாமியும் காயமடைந்து, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து, சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.