எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :9 நவம்பர் 2025, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் அருகே சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணப் பேரி வடக்குத் தெருவைச் சோ்ந்த வெள்ளைக்கனி மகன் செல்லப்பாண்டி(58). கூலித் தொழிலாளியான இவா் பூலாங்குளம் சென்று விட்டு தனது பைக்கில் ஆலங்குளம் - தென்காசி சாலை வட்டாலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தாராம்.

அப்போது எதிா்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்ததாம். இதில் செல்லப்பாண்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆலங்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கப் பதிந்து விசாரிக்கின்றனா்.