பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

Updated On :9 நவம்பர் 2025, 8:16 pm

ஆலங்குளம் அருகே சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணப் பேரி வடக்குத் தெருவைச் சோ்ந்த வெள்ளைக்கனி மகன் செல்லப்பாண்டி(58). கூலித் தொழிலாளியான இவா் பூலாங்குளம் சென்று விட்டு தனது பைக்கில் ஆலங்குளம் - தென்காசி சாலை வட்டாலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தாராம்.
அப்போது எதிா்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்ததாம். இதில் செல்லப்பாண்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆலங்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...