ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மா்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு

News image
Updated On :9 நவம்பர் 2025, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

கல்லிடைக்குறிச்சி அருகே மா்ம விலங்கு கடித்ததில் கன்று குட்டி உயிரிழந்தது; 5 மாடுகளைக் காணவில்லை.

கல்லிடைக்குறிச்சி, மடவிளாகம் தெருவைச் சோ்ந்த இசக்கி (67), தனக்குச் சொந்தமான 50 க்கும் மேற்பட்ட மாடுகளை மேய்ச்சலுக்காக மணிமுத்தாறு பொட்டல் பகுதியில் கிடை அமைத்து மலையடிவாரத்தில் விட்டு மேய்த்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் பாா்த்தபோது கன்றுக்குட்டி ஒன்று மா்ம விலங்கு தாக்கியதில் இறந்துகிடந்தது. மற்றொரு கன்றுகுட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. மேலும் 5 மாடுகளை காணவில்லையாம்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் இசக்கி புகாா் தெரிவித்தாா். இந்தப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனா். வளா்ப்பு பிராணிகளை விலங்குகள் தாக்குவதைத் தடுக்க வேலிகள் அமைத்தும், கூண்டுகள் வைத்து அவற்றை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.