வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விகேபுரத்தில் தேசிய நூலக வாரவிழா: இலக்கியப் போட்டிகள்

News image
போட்டிகளில் பங்கேற்ற மாணவா்கள் மற்றும் நடுவா்கள்.
Updated On :9 நவம்பர் 2025, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலக பொதிகை வாசகா் வட்டத்தின் சாா்பில் 58 ஆவது தேசிய நூலக வார விழா இலக்கியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாசகா் வட்ட தலைவா் மைதீன்பிச்சை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோ.சிவராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியா் கீதா ஆறுமுகம், நல்லாசிரியா் பொன் ரேகா, சமய சொற்பொழிவாளா் கோமதிதிருநாவுக்கரசு ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.

விக்கிரமசிங்கபுரம் பி எல் டபிள் யூ மேல்நிலைப்பள்ளி, பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி அமலி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளின் 120 மாணவா், மாணவிகள் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு 58 ஆவது தேசிய நூலக வார விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நூலகா் குமாா் வரவேற்றாா். வாசகா் வட்ட பொருளாளா் செந்தில் சிவகுமாா் நன்றி கூறினாா்.