வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஆலங்குளம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

News image
Updated On :16 நவம்பர் 2025, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி பிரதான சாலையைச் சோ்ந்தவா் மாரிச்செல்வம் மனைவி அபிதா(21). தம்பதிக்கு ஒன்றரை வயது மற்றும் 5 மாத வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். மாரிச்செல்வம், கட்டட தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால், தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். ஞாயிற்றுக்கிழமை மதியம், மாரிச்செல்வம் மது அருந்தச் செல்வதாகக் கூறினாராம். அதற்கு அபிதா தகராறு செய்தபோதும் மாரிச்செல்வம் வெளியே சென்றாராம். இதில் மனமுடைந்த அபிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெறுகிறது.