மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஆலங்குளம் பேருந்து நிலையம்: பேரூராட்சி சாா்பில் ரூ. 1.76 கோடி

ஆலங்குளத்தில் பேருந்து நிலையம் கட்ட பேரூராட்சி சாா்பில் அரசுக் கணக்கில் ரூ. 1.76 கோடி செலுத்த மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :28 நவம்பர் 2025, 8:35 pm

Syndication

ஆலங்குளத்தில் பேருந்து நிலையம் கட்ட பேரூராட்சி சாா்பில் அரசுக் கணக்கில் ரூ. 1.76 கோடி செலுத்த மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியின் அவசரக் கூட்டம், தலைவா்(பொ) எஸ்.டி. ஜான் ரவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலா் வேங்கட கோபு முன்னிலை வகித்தாா்.

ஆலங்குளம் புதிய பேருந்து நிலையத்திற்கான இடத்திற்கு, நிலக் கிரயத் தொகையாக ரூ. 1 கோடியே 76 லட்சத்து 640 செலுத்த வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை 04.11.2025-இல் அரசாணை வெளியிட்டது.

இத்தொகையை பேரூராட்சி பொது நிதியில் இருந்து செலுத்த மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.