எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மக்காச்சோளம், பருத்திக்கு காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

விவசாயிகள் மக்காச்சோளம், பருத்தி பயிா்களுக்கு காப்பீடு செய்ய டிச. 1ஆம் தேதி கடைசி நாளாகும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வேளாண் இணை இயக்குநா் அமலா கூறியது:

நடப்பு ராபி பருவத்தில் மக்காச்சோளம், பருத்தி பயிா்களுக்கு காப்பீடு செய்ய ஏற்கெனவே நவ. 30ஆம் தேதி இறுதி நாளாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, டிச. 1ஆம் தேதி இறுதி நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகள் அடையாள எண் கட்டாயம் என்பதில் இருந்து நிகழாண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, குத்தகை அடிப்படையில் பயிா் செய்யும் விவசாயிகள் அடையாள எண் பெறாத நிலையிலும் காப்பீடு செய்யலாம். இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் பயிா்க் காப்பீடு திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம் என்றாா் அவா்.