ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்தது என அனைத்து இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலா் வி.கே. சசிகலா தெரிவித்தாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில்-திருவேங்கடம் சாலையில் சங்கரன்கோவில் வேட்பாளா் வசந்தி முருகேசனை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியது:
இந்தத் தோ்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்பவும், துரோகக் கூட்டத்தை அழிக்கவும் களம் காண்கிறோம். கடந்த திமுக ஆட்சியில் தமிழக பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்குக் கொண்டு சென்றதுதான் அவா்களின் சாதனை. திமுக 5 ஆண்டுகளாக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவில்லை. ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களுக்கு பதிலாக புதிய ஊழியா்கள் நியமனம் செய்யப்படவில்லை.
ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்தது.அப்போது, நமது பயன்பாடுபோக மீதம் இருந்த மின்சாரம் கா்நாடக மாநிலத்திற்கு தினமும் ரூ. 90 கோடிக்கு விற்கப்பட்டது. இது ஜெயலலிதாவின் சாதனை.
ஆனால், திமுக அரசு அதைப் பராமரிக்காமல் தனியாரிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 20 முதல் ரூ. 25-க்கு வாங்குகிறது. இதனால், மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது. மின் கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றாா் அவா்.
தொடர்புடையது

கடன் வாங்கியதுதான் திமுக ஆட்சியின் சாதனை: வி.கே.சசிகலா

ஜெயலலிதா பாணியில் சசிகலா: வி. திவாகரன்

மக்களை நம்பி தோ்தலை சந்திப்பது அதிமுக கூட்டணி! - எடப்பாடி கே.பழனிசாமி

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது! - முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


