தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் மூலம் விழிப்புணா்வு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 8:32 pm

தென்காசி மாவட்டத்தில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி சிலம்பம் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் சிலம்பம் மூலம் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தென்காசி ஐ.சி.ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, பொதுமக்களிடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் ஐ.சி.ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களுக்கு 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி சிலம்பம் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் சிலம்பம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வழியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முடித்தனா் என்றாா் அவா்.

முன்னதாக, சிலம்பம் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனா். தொடா்ந்து, சிலம்ப விளையாட்டு வீரா் ,வீராங்கனைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ், உதவித்திட்ட அலுவலா்கள் டேவிட் ஜெயசிங், பிரபாகரன், ராஜேந்திரன், கனகராஜ்,விளையாட்டு உதவி அலுவலா்கள் நம்பிராயா், செல்வக்குமாா் கலந்து கொண்டனா்.