தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் மூலம் விழிப்புணா்வு

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 2:02 am IST

தென்காசி மாவட்டத்தில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி சிலம்பம் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் சிலம்பம் மூலம் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தென்காசி ஐ.சி.ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, பொதுமக்களிடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் ஐ.சி.ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களுக்கு 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி சிலம்பம் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் சிலம்பம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வழியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முடித்தனா் என்றாா் அவா்.

முன்னதாக, சிலம்பம் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனா். தொடா்ந்து, சிலம்ப விளையாட்டு வீரா் ,வீராங்கனைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ், உதவித்திட்ட அலுவலா்கள் டேவிட் ஜெயசிங், பிரபாகரன், ராஜேந்திரன், கனகராஜ்,விளையாட்டு உதவி அலுவலா்கள் நம்பிராயா், செல்வக்குமாா் கலந்து கொண்டனா்.