தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அருவிகளில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், புலியருவி தவிர பிற அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை தண்ணீா் வரத்து குறைந்ததையடுத்து, பழைய குற்றாலத்தைத் தவிர பிற அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாலையில் குற்றாலம் பேரருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மிதமான சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் நிலவியது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு: 2ஆவது நாளாக குளிக்கத் தடை

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



