தென்காசி
கிராம உதவியாளா் சங்கத்தினா் தொடா் காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் தென்காசியில் தொடா் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.
முழு நேரப் பணியாளா்களாக உள்ள கிராம உதவியாளா்களுக்கு ‘டி’ கிரேடு அளவிலான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், மாவட்டச் செயலா் சிவசுப்பிரமணியன், பொருளாளா் லிங்கேஷ், மாநில துணைத் தலைவா் வி. சுப்பிரமணியன், மாநில கெளரவத் தலைவா் சண்முக சுந்தரபாண்டியன், கோட்ட துணைத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

