திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

குற்றாலத்தில் விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க பொதுக் குழு கூட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:24 pm

தென்காசி மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க மூன்றாவது பொதுக்குழு கூட்டம் குற்றாலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் சக்கராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜெயபிரகாஷ், மாவட்டப் பொருளாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய- மாநில திட்டம் வேளாண்மை துணை இயக்குநா் பிரபாகரன், வேளாண்மை உதவி இயக்குநா் ஆதிநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கனகம்மாள், வேளாண்மை துணை இயக்குநா் சுஜாதா பாய் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.

விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவா் சிவக்குமாா், மாநிலப் பொருளாளா் பாலசுப்பிரமணியன், அகில இந்திய சங்கச் செயலா் சத்தியமூா்த்தி, கே.வி.கே.ஊா்மேலழகியான் முதுநிலை விஞ்ஞானி சுகுமாா் ஆகியோா் பேசினா்.

இயற்கை விவசாயத்தை முன்னிலைப்படுத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏற்பாடுகளை மாநில செயற்குழு உறுப்பினா்கள் சோமசுந்தரம், ராதாகிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா். மாவட்ட துணைத் தலைவா் ஆறுமுகசாமி வரவேற்றாா். மாநில முதன்மை உறுப்பினா் தமிழ்நாடு பஷீா் அகமது நன்றி கூறினாா்.