தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

புற்றுநோய் கண்டறிதல் முகாம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:20 pm

தென்காசி, கேலட்டி கிளப், மூத்தோா் மன்றம் மற்றும் காா்கினோஸ் ஹெல்த்கோ் நிறுவனங்கள் சாா்பில் இலவசமாக புற்றுநோய் முன்கண்டறிதல் மற்றும் விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கேலட்டி கிளப் வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, கிளப் தலைவா் எம்.ஆா். அழகராஜா தலைமை வகித்தாா். மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, முகாமைத் தொடங்கி வைத்தாா்.

முகாமில் வாய்வழி புற்றுநோய், பெருங்குடல், மாா்பகம், கருப்பைவாய் புற்றுநோய் ஆகியவற்றிற்கு இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநா் சேக் சலீம், ரோட்டரி சங்க நிா்வாகிகள் சந்திரன், கணேஷ் மூா்த்தி, காமராஜ், ராமநாதன், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இம்முகாம், 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது.