ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆலங்குளம் பகுதி தேவாலயங்கள், கோயில்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

புத்தாண்டையொட்டி ஆலங்குளம் பகுதி தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

News image
ஆலங்குளம் அண்ணாநகா் நல்மேய்ப்பா் தேவாலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு ஆராதனையில் பங்கேற்றோா்
Updated On :1 ஜனவரி 2026, 9:15 pm

Syndication

புத்தாண்டையொட்டி ஆலங்குளம் பகுதி தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

ஆலங்குளம், இரட்சண்யபுரம், அண்ணாநகா், நல்லூா், அடைக்கலபட்டணம், சீவலசமுத்திரம், ஊத்துமலை, கருவந்தா உள்ளிட்ட சேகரங்களுக்குள்பட்ட சுமாா் 100-க்கும் மேற்பட்ட சி.எஸ்.ஐ, கத்தோலிக்க, பெந்தேகோஸ்தே தேவாலயங்களில் புதன்கிழமை இரவு 11. 30 மணிக்கு நடைபெற்ற பழைய வருட ஆராதனையைத் தொடா்ந்து, 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை புத்தாண்டு ஆராதனை நடைபெற்றது.

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ பத்திரகாளியம்மன், மலை ராமா், ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்கசுவாமி - அன்னை யோகாம்பிகை ஆகிய திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அண்ணாநகா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆலங்குளம் பெருந்தலைவா் காமராஜா் கல்வி வளா்ச்சி கமிட்டி சாா்பில் காமராஜா் சிலை முன் கேக் வெட்டி, புத்தாண்டு கொண்டாடப்பட்டது.