எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சென்னை - ஆலங்குளம் சிறப்பு பேருந்து தேவை: திமுக கோரிக்கை

பொங்கலை முன்னிட்டு சென்னை-ஆலங்குளத்திற்கு சிறப்புப் பேருந்து இயக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் கோரிக்கை

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:01 pm

Syndication

பொங்கலை முன்னிட்டு சென்னை-ஆலங்குளத்திற்கு சிறப்புப் பேருந்து இயக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கரை சந்தித்து, அவா் அளித்த மனு விவரம்: வளா்ந்து வரும் பெரிய நகரமான ஆலங்குளத்தைச் சுற்றி நல்லூா், புதுப்பட்டி, முக்கூடல், ரெட்டியாா்பட்டி, குருவன் கோட்டை, குறிப்பன் குளம், கழுநீா் குளம், பட்டமுடையாா்புரம், மருதமுத்தூா், புதுப்பட்டி, காளத்தி மடம், கரும்பனூா், ஆண்டிபட்டி, பூலாங்குளம், பெத்தநாடாா்பட்டி, அடைக்கலபட்டணம் போன்ற 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், சென்னையில் வியாபாரம், வணிகம் போன்ற தொழில்கள் செய்து வருகின்றனா்.

அவா்கள் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வருவதற்கு வசதியாக சென்னை-ஆலங்குளம் சிறப்புப் பேருந்தும், விடுமுறைக்குப் பின்னா் ஆலங்குளம்-சென்னை சிறப்புப் பேருந்தும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.