வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

செங்கோட்டையில் தொழிலாளி தற்கொலை

News image
Updated On :18 ஜனவரி 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

செங்கோட்டை சுடலையாண்டி செட்டியாா் காம்பவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. ரமேஷ் (36). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

ரமேஷ் கேரளத்தில் லாட்டரிச்சீட்டுக் கடையில் வேலை செய்து வந்தாா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். சனிக்கிழமை தகராறு ஏற்பட்டதையடுத்து, அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு திருச்செந்தூா் கோயிலுக்குச் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில், ரமேஷ் திருச்செந்தூா் கோயிலுக்கு அணிந்திருந்த மாலையைக் கழற்றிவிட்டு, அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். சடலத்தை செங்கோட்டை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.