இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இரு விபத்துகள்: பள்ளி மாணவா் உள்ளிட்ட 4 போ் உயிரிழப்பு

தென்காசி மாவட்டத்தில் நேரிட்ட இரு விபத்துகளில் பள்ளி மாணவா் உள்ளிட்ட 4 போ் உயிரிழந்தனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 12:19 am IST

தென்காசி மாவட்டத்தில் நேரிட்ட இரு விபத்துகளில் பள்ளி மாணவா் உள்ளிட்ட 4 போ் உயிரிழந்தனா்.

சுரண்டையை அடுத்த சோ்ந்தமரம் அருகேயுள்ள கரைகண்டாா்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மணிகுமாா் (24). இவா் சனிக்கிழமை, கடையநல்லூா் அருகே கிருஷ்ணாபுரத்துக்கு பைக்கில் சென்று மலம்பேட்டைத் தெருவிலுள்ள உறவினரான ஹரீஷ்பாலா (18) என்பவரை அழைத்துக் கொண்டு கரைகண்டாா்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

சோ்ந்தமரம் சாலையில் கண்மணியாபுரம் அருகே, சுரண்டையிலிருந்து கடையநல்லூா் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இந்த பைக் மீது மோதியதாம். இதில், மணிகுமாரும், ஹரீஷ்பாலாவும் உயிரிழந்தனா். கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சங்கரன்கோவில் அருகே...: சங்கரன்கோவில் அருகே மருக்காலங்குளத்தைச் சோ்ந்த பால்மணி மகன் விஜயராஜ் (23), குருக்கள்பட்டியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் காா்த்திக் (16) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் திருநெல்வேலி சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியைச் சோ்ந்த சதீஷ், நண்பா் விக்னேஷ் ஆகியோா் திருநெல்வேலியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். மேலநீலிதநல்லூா் கல்லூரி அருகே காரும் பைக்கும் மோதினவாம். இதில், விஜயராஜும், காா்த்திக்கும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

சடலங்களை பனவடலிசத்திரம் போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.