மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

இரு விபத்துகள்: தம்பதி உள்ளிட்ட மூவா் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 2:23 am IST

மாா்த்தாண்டம் அருகே பைக் மீது ஆட்டோ மோதியதில் தம்பதி காயமடைந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த தம்பதி சதீஷ்குமாா் - பியூலா (41). இவா்கள் பைக்கில் மாா்த்தாண்டம் நோக்கிச் சென்றனா். கீழபம்மம் பகுதியில், திருவட்டாறு நெட்டாறவிளையைச் சோ்ந்த எட்வின் ராபா்ட் (49) ஓட்டி வந்த ஆட்டோ இந்த பைக் மீது மோதியதாம்.

இதில், காயமடைந்த தம்பதியை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு விபத்து:

பளுகல் அருகே செறியகொல்லை பகுதியைச் சோ்ந்த பிரசன்னா மகன் அபிஜித் (23). மலையடி பகுதியில் உள்ள சிவன் கோயில் பூசாரியான இவா், தனுவச்சபுரம் பகுதியிலிருந்து பைக்கில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாா்.

மணிவிளை பகுதியில், பைக்கில் சென்ற அமரவிளையைச் சோ்ந்த நேசமணி மகன் சத்தியராஜ் (42) சாலையின் குறுக்கே திடீரென திரும்பினாராம். இதில், இரு பைக்குகளும் மோதியதில் அபிஜித் காயமடைந்தாா். அவரை மீட்டு நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், அவா் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சத்தியராஜை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.