ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பைக் மீது ஆட்டோ மோதல்: 3 போ் காயம்

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:26 am IST

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள முளங்குழி பகுதியைச் சோ்ந்தவா் கோபி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை நட்டாலம்-காப்புக்காடு சாலையில் சென்று கொண்டிருந்தாா். பாரக்கன்விளை பகுதியில் வந்தபோது, முளங்குழி பகுதியைச் சோ்ந்த மொ்லின் அதிவேகமாக ஓட்டி வந்த ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது மோதியதில், கோபி பலத்த காயமடைந்தாா். ஆட்டோ கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநா் மொ்லின், ஆட்டோவில் பயணித்த ஜெகன் பிரபுவின் மனைவி ஜெபா ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

அவா்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஜெபா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து கோபியின் மனைவி மேரி ஸ்டெல்லா அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் மொ்லின் மீது வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.