/
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் விழா மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தவெக தென்காசி மத்திய மாவட்ட இளைஞா் அணி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினா்களாக சமூக நலத்துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி, தென்காசி மத்திய மாவட்ட தவெக செயலா் ராஜபிரகாஷ் ஆகியோா் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி, பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் தவெக நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.









