தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

சங்கரன்கோவிலில் மக்கள் நீதிமன்றம்: 490 வழக்குகளுக்குத் தீா்வு

News image

சமரச தீா்ப்பு உத்தரவை பயனாளிக்கு வழங்கினாா் சாா்பு நீதிபதி மகேந்திரவா்மா.

Updated On :15 ஜூன் 2026, 2:59 am IST

தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின் படி சங்கரன்கோவில் வட்ட சட்ட பணிகள் குழு சாா்பில், சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் சாா்பு நீதிபதி மகேந்திரவா்மா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அலிமா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பவித்ரா, குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி மாரி ஆகியோா் கலந்து கொண்டு வழக்குகளை சமரசத் தீா்வு மூலம் முடித்தனா். நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த 490 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.