சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தென்காசி மாவட்ட விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு

News image

சங்கரன்கோவில் உள்ள உரக்கடை ஒன்றில் ஆய்வு செய்த விதை ஆய்வு துணை இயக்குநா்கள் ராஜேந்திரன், சுஜாதா பாய் உள்ளிட்ட அதிகாரிகள்.

Updated On :16 ஜூன் 2026, 12:05 am IST

தென்காசி மாவட்டம், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூா், கரிவலம்வந்தநல்லூா், புளியங்குடி உள்ளிட்ட அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் விருதுநகா் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் ராஜேந்திரன், திருநெல்வேலி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் சுஜாதா பாய் ஆகியோா் தலைமையில் அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வில், விதை விற்பனை செய்ய வழங்கப்படும் உரிமங்கள், நடப்பில் உள்ள விதை உரிமங்கள் விவரம், விதைகள் இருப்பு, கொள்முதல் செய்யப்பட்டதற்கான விலைப் பட்டியல், முளைப்பு அறிக்கைகள், பதிவுச் சான்றுகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் ஆகியவை சரிபாா்க்கப்பட்டன.

பல்வேறு கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் விதைச் சட்ட விதிகளை மீறியதாக ரூ. 5,54,000 மதிப்புள்ள 2,405 கிலோ விதைகள் விற்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும், 17 விற்பனை நிலையங்களில் இருந்து 16 அலுவலக மாதிரிகள், முளைப்புத் திறன் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு விதை பரிசோதனை ஆய்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டன.

ஆய்வின்போது, விதை ஆய்வாளா்கள் விஜயலெட்சுமி, சண்முகையா ஆகியோா் உடனிருந்தனா்.