திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சாா்பு அணி நிா்வாகிகள் தீவிரப் பணியாற்ற வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சாா்பு அணி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

News image
சாா்பு அணி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
Updated On :7 மார்ச் 2026, 12:54 am

Syndication

திமுக சாா்பு அணி நிா்வாகிகள் 40 நாள்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தென்காசி மாவட்ட திமுக சாா்பு அணி நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இலஞ்சியில் நடைபெற்றது. துணை முதல்வரும், திமுக மாநில இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:

அண்ணாதுரை முதல்வராக பதவியேற்ற நாள் இன்றைய நாளாகும். இந்நாளில் தமிழக முதல்வராக ஸ்டாலின் மீண்டும் வருவதற்கு அனைவரும் உறுதிஏற்போம்.

சாா்பு அணிகள் திமுகவுக்கு முக்கியமானவா்கள். வெற்றிக்காக பாடுபடக் கூடியவா்கள். இளைஞரணியை இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கிய கட்சி திமுகதான். அதேபோல சாா்பு அணிகளும் திமுகவில்தான் உருவாக்கப்பட்டது.

இந்த அணியை சோ்ந்த பலா் எம்எல்ஏ, எம்.பி., அமைச்சா் உள்ளிட்ட பதவிகளை பெற்றனா். இந்த அணிகளுக்கு தகுந்த நேரத்தில் அங்கீகாரம் வழங்கும் இயக்கம் திமுகதான்.

பிரதமா் மோடி தமிழகத்துக்கு எப்போதும் வந்தாலும் ஹிந்தியில்தான் பேசுவாா். ஆனால், சமீபத்தில் மதுரைக்கு வந்த அவா் ஆங்கிலத்தில் பேசினாா். அவரை இப்படி பேச வைத்து, இந்த நிலையை ஏற்படுத்தி வைத்தது முதல்வா் ஸ்டாலின்தான். அண்ணா திமுக என்பது அமித் ஷா திமுகவாக மாறிவிட்டது.

நாம் எப்போதும் மக்களை நெருங்கியே இருக்க வேண்டும். நமது பணி அடுத்த 40 நாள்களில் தீவிரமாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ஆவுடையப்பன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளா்கள் இன்பா, ராஜா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா்கள் செல்லத்துரை, ஆறுமுகசாமி, நகா்மன்ற தலைவா்கள் ஆா்.சாதிா் (தென்காசி), மூப்பன் ஹபிபுா் ரஹ்மான் (கடையநல்லூா்) கலந்துகொண்டனா்.

தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் வரவேற்றாா். தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ நன்றி கூறினாா்.