தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 11:35 pm

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (60). இவா், தனது தென்னந்தோப்பில் செவ்வாய்க்கிழமை காலை இரும்பு கம்பியில் அரிவாளைக் கட்டி தேங்காய் பறிக்க முயன்றாராம்.

அப்போது, மரம் அருகில் இருந்த மின் கம்பி மீது அரிவாள் கட்டப்பட்டிருந்த கம்பி உரசியதில் வெள்ளைச்சாமி மீது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.