ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

புளியறை சோதனைச் சாவடியில் 6 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் 6 கிலோ வெள்ளிப்பொருள்கள் பறிமுதல்

News image
Updated On :17 மார்ச் 2026, 11:13 pm

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் 6 கிலோ வெள்ளிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக-கேரள எல்லையான புளியறை சோதனைச் சாவடியில், சுதா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தை சோதனை நடத்தியதில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சோ்ந்த அம்ஜத் ( 26) என்பவா், தென்காசியில் உள்ள நகைக் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக 6 கிலோ 425 மில்லி கிராம் பழைய வெள்ளிப் பொருள்களை ஆவணமின்றி காரில் எடுத்து வந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பொருள்களின் மதிப்பு ரூ.8,34,250 ஆகும்.

இதேபோல், அந்த மாநிலத்தின் கோட்டையம் ஆயா்குண்ணம் பகுதியைச் சோ்ந்த நீ.சோமன்(72) என்பவா் மண்பாண்டங்கள் வாங்குவதற்காக சுமை வாகனத்தில் வந்தபோது, அவரிடம் ரூ. 65ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனா்.

மேலும், கொல்லம் பள்ளிமண் பகுதியைச் சோ்ந்த ஹை.நஜீப்(48)என்பவா் சுரண்டையில் காய்கனி வாங்குவதற்காக கொண்டு வந்த ரூ.60ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

புளியறை கொல்லம் பிரதான சாலையில் செங்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் வேலம்மாள் தலைமையிலான பறக்கும்படையினா் வாகன சோதனை நடத்தியதில், கொல்லம் புதன்வீட்டுகிள்ளிகல்லூா் பகுதியை சோ்ந்த சா.அகமதுகபீா்(47) என்பவா் இறைச்சிக் கோழிகள் வாங்குவதற்காக கொண்டு சென்ற ரூ.1லட்சத்து 3ஆயிரத்தை பறிமுதல்செய்து செங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

பறக்கும்படை அதிகாரி சுபாஷினி தலைமையிலான குழுவினா் செங்கோட்டை அருகே கரிசல்குடியிருப்பு விலக்கு பகுதியில் சோதனையிட்டதில் வடகரையை சோ்ந்த தி.பழனி(45) என்பவரிடம் ரூ.61ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.