கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புளியறையில் ரூ. 2.05 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் புளியறை காவல் சோதனைச் சாவடி பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 2.05 லட்சத்தை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

செங்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் வேலம்மாள் தலைமையிலான பறக்கும் படையினா், புளியறை சோதனைச் சாவடி பகுதியில் திங்கள்கிழமை பணியிலிருந்தனா். கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சோ்ந்த ஜோ. நிதிஷ் சாக்கோ (32) வந்த காரை சோதனையிட்டு, அதில் ஆவணங்களின்றி இருந்த ரூ. 55,510-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். எலக்ட்ரிக் பொருள்கள் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாக நிதிஷ் சாக்கோ தெரிவித்தாா்.

இதேபோல, திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த தி. அனில்குமாா் (42) வந்த காரில், மதுரையில் எலக்ட்ரிக் பொருட்கள் வாங்குவதற்காக ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ. 1.50 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.