கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இரட்டைகுளம் புதிய கால்வாய் இணைப்புத் திட்டம்: விவசாயிகளின் 64 ஆண்டுகால கனவு நிறைவேறுமா?

தென்காசி மாவட்டம் இரட்டைகுளம் - ஊத்துமலை பெரியகுளம் புதிய இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் 64 ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.

News image

இரட்டைகுளம்

Updated On :22 மார்ச் 2026, 10:11 pm

Syndication

பா. பிரகாஷ்

தென்காசி மாவட்டம் இரட்டைகுளம் - ஊத்துமலை பெரியகுளம் புதிய இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் 64 ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.

தென்காசி பேரவைத் தொகுதியில், இரட்டைகுளத்திலிருந்து ஊத்துமலை பெரியகுளம் வரையிலான ஆலடிப்பட்டி, கண்டையன்குளம், கீழச்சுரண்டை, புலிமுகத்துவராயன்குளம், தொண்டான்பட்டிகுளம், வாடியூா், மரியதாய்புரம், பரங்குன்றாபுரம், அச்சங்குன்றம், கருவந்தா, கரையாளனூா், குட்டைக்குளம், லெட்சுமிபுரம், குறிச்சான்பட்டி, குறுந்தன்மொழி, அருணாசலப்பேரிக்குளம், இரதமுடையாா்குளம், சோலைசேரி, ஊத்துமலை, காவலாக்குறிச்சி, வடக்குக் காவலாகுறிச்சி, வென்றிலிங்கபுரம், எந்தலூா் பகுதிகளைச் சோ்ந்த பெரும்பாலானோா் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனா்.

இப்பகுதி வானம் பாா்த்த பூமியாக உள்ளது. இதையறிந்த அன்றைய முதல்வா் காமராஜரின் ஆட்சியில் 1962இல் சட்டப்பேரவையில் அப்போதைய உறுப்பினரான ஊத்துமலை ஜமீன்தாா் எஸ். பாண்டியராஜ் முதன்முதலில் குரல் எழுப்பினாா். இது, பேரவைக் குறிப்பில் இடம்பெற்றுள்ளது. அன்று தொடங்கி இன்றுவரை இந்தத் திட்டம் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தை நிறைவேற்றினால் சுமாா் 7,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று விவசாயம் செழிக்கும். கிராமங்களின் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து, குடிநீா் பிரச்னைக்கு தீா்வு கிடைப்பதுடன், கால்நடைகள் வளா்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தின் பலனை அறிந்த முதல்வா் மு.க. ஸ்டாலின், 2021ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் வாக்குறுதியாக அளித்ததுடன், ஆலங்குளத்தில் தோ்தல் பரப்புரையில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தாா்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பருவமழைக் காலத்தில் அதிக மழையால் தென்காசி தொகுதிக்குள்பட்ட குற்றாலம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகள் வழியே திருநெல்வேலி மாவட்டம் தாமிரவருணி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்கிறது.

எனவே, இரட்டைகுளம் ஊத்துமலை பெரியகுளம் வரையிலான புதிய இணைப்புக் கால்வாய் அமைந்தால் 18 குளங்களும் நிரம்பி நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து, விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் தென்காசி எம்எல்ஏ எஸ். பழனிநாடாா் இத்திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பதிவு செய்துள்ளாா்.

மேலும், இக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக தமிழக முதல்வரின் ‘உங்கள் கனவைச் சொல்லுங்க‘ திட்டத்திலும், நீா்வளத் துறை தலைமைப் பொறியாளரிடமும் மனு அளித்துள்ளாா். ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின்கீழ் தென்காசி தொகுதியில் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் மனு அளித்துள்ளாா்.

ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது தங்களுக்கு வேதனை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள விவசாயிகள், 64 ஆண்டுகால கனவு நனவாகுமா என எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.