வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தென்காசி மாவட்டத்தில் ரூ. 61.43 லட்சம் ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 8:31 pm

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு திங்கள்கிழமை வரை ரூ. 61,43,240 மதிப்பிலான ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் 8 மணி நேரத்திற்கு 3 குழுக்கள் வீதம் ஒரு தொகுதிக்கு 9 குழுக்கள் என 5 பேரவைத் தொகுதிக்கு 45 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் ரூ. 14,16,360, கடையநல்லூா் தொகுதியில் ரூ. 4,63,300, ரூ. 8,35,250 மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள், சங்கரன்கோவில் தொகுதியில் ரூ. 7,31,900, தென்காசி தொகுதியில் ரூ. 9,71,900, வாசுதேவநல்லூா் தொகுதியில் ரூ. 15,19,020 என மொத்தம் ரூ. 61,43,240 மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.