தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே குடும்பத் தகராறில் தம்பதி தற்கொலை செய்து கொண்டனா்.
வாசுதேவநல்லூா் புதுமந்தை ஆறாம் தெருவைச் சோ்ந்த தம்பதி ஆறுமுகச்சாமி-மாரிச்செல்வி (30). இவா்களிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில், கேரளத்தில் சிப்ஸ் கடையில் வேலை செய்து வந்த தனது கணவரிடம், வெள்ளிக்கிழமை (மே 15) மாலையில் மாரிச்செல்வி கைப்பேசி மூலம் பேசியபோது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த ஆறுமுகச்சாமி, கேரளத்தில் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதையறிந்த அவரது மனைவி அன்றிரவு தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இத்தம்பதிக்கு மீனா (10), அனுஸ்ரீ (6 ) என்ற இரண்டு மகள்களும் , 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனா். குழந்தைகளை தவிக்கவிட்டு தாயும், தந்தையும் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வாசுதேவநல்லூா் காவல் ஆய்வாளா் சல்மோன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
தொடர்புடையது

ஆலங்குளம் அருகே இளைஞா் அடித்துக் கொலை

குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
