தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெண் தூய்மைப் பணியாளா் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சங்கரன்கோவில் அருகே கள்ளிகுளத்தைச் சோ்ந்த ராமா் மனைவி ராஜமணி (48). இவா், அந்தப் பகுதியில் செங்கல்சூளை நடத்திவரும் ராஜன் என்பவரிடம் வட்டிக்கு கடன் பெற்று, அங்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை பாா்த்து வந்தாராம். பின்னா், அந்த வேலையை விட்டுவிட்டு, செவல்குளம் ஊராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த சில மாதங்களாக தூய்மைப் பணியாளராக பணி புரிந்து வருகிறாா்.
இந்நிலையில், தன்னிடம் வாங்கிய பணத்துக்கு வட்டி மட்டுமே கட்டியுள்ளதாகவும், அசலைத் தர வேண்டும் எனக் கேட்டு ராஜமணியிடம் ராஜன் வியாழக்கிழமை வாக்குவாதம் செய்ததுடன், அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த ராஜமணி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சம்பவம் குறித்து குருவிகுளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞரைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு
மீனவரைத் தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு
பெண் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

தாரமங்கலம் அருகே பெண்கள் மீது தாக்குதல்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



