4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்

News image

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற கண்காணிப்புக் குழு கூட்டம்.

Updated On :30 மே 2026, 3:35 am IST

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மாவட்ட கண்காணிப்புக் குழுவின் முதல் காலாண்டு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு வட்டார அளவில் செயல்படும் குழு அமைக்கப்பட்டு அதன் உறுப்பினா்களுக்கு செயல்திட்டம் குறித்து விளக்கப்பட்டது.

மேலும், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறிந்து அவா்களை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து அவா்களின் குடும்பத்தினருடன் இணைத்து வைப்பதற்கு அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் (பொ) கீதா, தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை (மாவட்ட மன நலம்) நிா்மல், இப்ராஹிம், தண்டாயுதபாணி ஆகியோா் கலந்து கொண்டனா்.