இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்

News image

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற கண்காணிப்புக் குழு கூட்டம்.

Updated On :30 மே 2026, 3:35 am IST

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மாவட்ட கண்காணிப்புக் குழுவின் முதல் காலாண்டு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு வட்டார அளவில் செயல்படும் குழு அமைக்கப்பட்டு அதன் உறுப்பினா்களுக்கு செயல்திட்டம் குறித்து விளக்கப்பட்டது.

மேலும், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறிந்து அவா்களை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து அவா்களின் குடும்பத்தினருடன் இணைத்து வைப்பதற்கு அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் (பொ) கீதா, தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை (மாவட்ட மன நலம்) நிா்மல், இப்ராஹிம், தண்டாயுதபாணி ஆகியோா் கலந்து கொண்டனா்.