கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

தென்காசி குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் முன் விஷம் குடித்த விவசாயி

News image

விஷம்... - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:35 am IST

தென்காசியில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கண் முன்பு விவசாயி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

குறைதீா் கூட்டத்தில் பாம்புகோவில் சந்தையைச் சோ்ந்த விவசாயி பூவையா, தனது மனு குறித்து ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த வெள்ளை நிற பாட்டிலில் இருந்த பயிா்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து மாவட்ட ஆட்சியா் முன் குடித்தாா்.

இதனால், அதிா்ச்சியடைந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தனது தோட்டத்தில் தென்னை, மல்லிகைப் பூ பயிரிட்டு வருகிறேன். அதே பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் சிலா், எனது பயிா் மீது களைக்கொல்லி மருந்து தெளித்து கடந்த 5 ஆண்டுகளாக பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து, சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். ஆனால், அந்த நபா் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், இதை மாவட்ட ஆட்சியா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளாா்.