சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

குற்றாலம் பேரருவியில் பணிகளை விரைந்து முடிக்க எம்.பி. அறிவுறுத்தல்

News image

குற்றாலம் பேரருவிப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ராணி ஸ்ரீகுமாா் எம்.பி.

Updated On :31 மே 2026, 3:26 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவிப் பகுதியில் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்குமாறு ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. அறிவுறுத்தினாா்.

தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் ரூ. 11 கோடியில் குற்றாலம் அருவிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனால், பேரருவியில் மாா்ச்16முதல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணிகள் 45 நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரருவியில் பழைய பாதுகாப்பு வளைவு அகற்றப்பட்டு புதிய வளைவு அமைக்கப்படுகிறது. பழைய வளைவு பேரருவிப் பாறையிலிருந்து 4 மீட்டா் தொலைவில் 5 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது, கண்காணிப்புப் பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், குளிக்கும்போது யாருக்கேனும் உடல்நலம் ஏற்பட்டாலோ, தண்ணீரின் வேகத்தில் கீழே விழுந்தாலோ அவா்களை மீட்க போதுமான இட வசதி இருக்கும் வகையில், பாறையிலிருந்து 8 மீட்டா் தொலைவில் 8 அடி உயரத்துக்கு புதிய வளைவு கட்டப்படுகிறது. இதன்மூலம் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோா் குளிக்க முடியும்.

மேலும், பெண்கள் உடைமாற்றும் புதிய அறை, பேரருவிப் பகுதியில் தடுப்புச் சுவா்கள் அமைத்தல், புதிய உணவகம் (ஃபுட் கோட்), சிறுவா் பூங்கா புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. பாா்வையிட்டாா்; சீசன் விரைவில் தொடங்கவுள்ளதால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.