இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

சிவகிரி திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழி

News image

பூக்குழி இறங்கிய பக்தா்கள்.

Updated On :1 ஜூன் 2026, 2:47 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரி திரௌபதியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூக்குழி நடைபெற்றது.

இத்திருவிழா கடந்த சனிக்கிழமை (மே 30) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மூலவா் திரௌபதியம்மன், உற்சவ மூா்த்திகள், பாஞ்சாலி, கிருஷ்ணா், அா்ச்சுனா், பரிவார தெய்வங்கள், பஞ்ச பாண்டவா்களுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் பூஜைகள், வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் விரதமிருந்த ஏராளமான பக்தா்கள் பூக்குழி இறங்கினா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா், பக்தா்கள் செய்திருந்தனா்.