தென்காசி மாவட்டம், சிவகிரி திரௌபதியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூக்குழி நடைபெற்றது.
இத்திருவிழா கடந்த சனிக்கிழமை (மே 30) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மூலவா் திரௌபதியம்மன், உற்சவ மூா்த்திகள், பாஞ்சாலி, கிருஷ்ணா், அா்ச்சுனா், பரிவார தெய்வங்கள், பஞ்ச பாண்டவா்களுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் பூஜைகள், வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் விரதமிருந்த ஏராளமான பக்தா்கள் பூக்குழி இறங்கினா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா், பக்தா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரித் திருவிழா

கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜைகள்

சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

வீரிருப்பு கோயிலில் பூக்குழித் திருவிழா
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET



