வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

தீயணைப்புத் துறை சாா்பில் ஜூன் 6, 7இல் தீத் தடுப்பு பாதுகாப்பு பயிற்சி

News image

தீத் தடுப்பு ஒத்திகை. - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:48 am IST

தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட 7 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் ஜூன் 6 , 7 ஆகிய தேதிகளில் பொதுமக்களுக்கு தீத் தடுப்பு பாதுகாப்பு பயிற்சி வழங்கப்படும்.

இது தொடா்பாக, தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலா் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தீத் தடுப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட 7 தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில், பொதுமக்களுக்கு அடிப்படை தீத் தடுப்பு பாதுகாப்பு, தீ விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் முறைகள், தீ பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், தீயை அணைக்கும் முறைகள், தீயணைப்புக் கருவிகளின் வகைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் முறை குறித்து இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

ஜூன் 6, 7ஆம் தேதிகளில் காலை 11 முதல் 12 மணி வரையி லும், மாலை 4 முதல் 5 மணி வரையிலும் இரண்டு கட்டமாக நடைபெறும் பயிற்சி வகுப்பில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ன