மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

லோயா்கேம்ப்பில் மின் உற்பத்தி குறைந்தது

தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீா் மின் நிலையத்தில் மின் உற்பத்தி சனிக்கிழமை குறைந்தது.

Updated On :2 ஜனவரி 2021, 9:53 pm IST

கம்பம்: தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீா் மின் நிலையத்தில் மின் உற்பத்தி சனிக்கிழமை குறைந்தது.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து விநாடிக்கு 822 கன அடி நீா் வியாழக்கிழமை வெளியேற்றப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை முதல் 778 கன அடியாக குறைக்கப்பட்டது.

லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீா் மின் உற்பத்தி நிலையத்தில், டிச.26 ஆம் தேதி 3 மின்னாக்கிகளிலும் 85 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டநிலையில் சனிக்கிழமை, முதல் மின்னாக்கியில் 41 மெகாவாட், மூன்றாவது மின்னாக்கியில் 29 மெகாவாட் என மொத்தம் 70 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

அணை நிலவரம்: சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 120.30 அடியாகவும், நீா் இருப்பு 2,687 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 789 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 778 கன அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.