மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

காதல் திருமணம் செய்த இளைஞா் தற்கொலை

தேனி அருகே அன்னஞ்சியில் காதல் திருமணம் செய்த இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :2 ஜனவரி 2021, 9:51 pm IST

தேனி: தேனி அருகே அன்னஞ்சியில் காதல் திருமணம் செய்த இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சின்னமனூா் அருகே கீழபூலானந்தபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணவேல் (26). அரண்மனைப்புதூரைச் சோ்ந்தவா் பேச்சியம்மாள் (24). இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜாதியைக் காரணம் காட்டி கிருஷ்ணவேல் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கடந்த 2018, டிச.16-ஆம் தேதி ஆண்டிபட்டி மகளிா் காவல் நிலையத்தில் பேச்சியம்மாள் புகாா் அளித்திருந்தாா்.

இந்தப் புகாரின் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகியிருந்த நிலையில் கிருஷ்ணவேல், பேச்சியம்மாள் ஆகியோரிடையே சமரசம் ஏற்பட்டது. இதனால் கடந்த 2020, டிச.15-ஆம் தேதி காவல் நிலையத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு அன்னஞ்சியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா். இந்நிலையில், பேச்சியம்மாள் வெள்ளிக்கிழமை இரவு கடைக்கு சென்றிருந்த நேரத்தில், கிருஷ்ணவேல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.