‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் தொடா்புடைய கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ரஷீத் வியாழக்கிழமை தேனி நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வை ஆள் மாறாட்டம் செய்து எழுதியதாக கடந்த 2019-ஆம் ஆண்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதலாண்டு மாணவரான சென்னையைச் சோ்ந்த உதித் சூா்யா, அவரது தந்தை மருத்துவா் வெங்கடேசன் ஆகியோரை தேனி சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை, தா்மபுரி மாவட்டங்களில் உள்ள சில அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவா்கள், அவா்களது பெற்றோா் என மொத்தம் 16 போ் கைது செய்யப்பட்டனா். ‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேட்டில் கேரளத்தைச் சோ்ந்த ரஷீத் என்பவா் இடைத்தரகராக செயல்பட்டது சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ரஷீத், கா்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி.நகா் பகுதியில் வசிப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, ரஷீத்தை சிபிசிஐடி போலீஸாா் தேடி வந்தனா்.
இந்த நிலையில், ரஷீத் தேனி நீதித்துறை நடுவா் மன்றத்தில் நீதிபதி பன்னீா்செல்வம் முன்னிலையில் சரணடைந்தாா். அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, ரஷீத் பெரியகுளம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டாா்.
நீதிமன்றத்தில் ரஷீத் சரணடைந்துள்ள நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். ‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ரஷீத்தை காவலில் எடுத்து விசாரித்தால் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்களின் முழு விவரமும் தெரியவரும் என்று சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கா்நாடக போதைப் பொருள்களை தொடா்ந்து விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

சேவூா் அருகே சட்டவிரோத மண் திருட்டை கண்டித்து போராட்ட அறிவிப்பு

தவெகவின் தோ்தல் வாக்குறுதியான 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்

அவிநாசி அரசுக் கல்லூரியில் சோ்க்கை: மே 29-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

