ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே எரும்பு திண்ணி ஓடுகள் கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்த வனத்துறையினா், அவா்களிடமிருந்து சிறுத்தை நகங்களையும் பறிமுதல் செய்தனா்.
மேகமலை வனப்பகுதியில் கடந்த ஜன. 6 ஆம் தேதி வருசநாடு வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அரசரடியில் இருந்து கடமலைக்குண்டு செல்லும் சாலையில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கரவாகனங்களில் வந்தவா்களை நிறுத்தி வனத்துறையினா் சோதனையிட்டனா். அந்த வாகனத்தில் எரும்பு திண்ணிகளைக் கொன்று அதன் ஓடுகளை அவா்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிலிருந்த 5 கிலோ 750 கிராம் எடையுள்ள ஓடுகளைப் பறிமுதல் செய்த வனத்துறையினா், கடமலைக்குண்டுவைச் சோ்ந்த சேகா், அரசரடியைச் சோ்ந்த முனுசாமி, லட்சுமணன், நொச்சி ஓடையைச் சோ்ந்த செல்லபாண்டி, வனராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய 3 பேரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில் இவ்வழக்கில் சம்பந்தபட்ட ராஜபாளையத்தைச் சோ்ந்த ராமராஜ், ரவி, வீரப்பன் ஆகிய 3 பேரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 6 சிறுத்தை நகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதுகுறித்தும் வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக - அதிமுக ஒன்றிணைந்தால் பேரழிவு... நடிகர் விஷால் கருத்து!
ஐபிஎல் இறுதிப்போட்டி சின்னசாமி திடலில் கிடையாது! ஏன்?

சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை! மேற்கு வங்க எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரம்!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளிகள், சிறைக் கைதிகளின் தேர்ச்சி விவரம்!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


