கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சுருளி அருவிக்கு சுற்றலாப் பயணிகள் செல்ல பொங்கலுக்குப் பிறகு அனுமதி

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், பொங்களுக்குப் பிறகு

Updated On :13 ஜனவரி 2021, 12:27 am

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், பொங்களுக்குப் பிறகு அது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் வனத்துறையினா் தெரிவித்தனா்.

கரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த மாா்ச் மாதம் முதல் அனுமதிக்கப்படவில்லை. நுழைவாயிலும் அடைக்கப்பட்டது. ஆனால் ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் மட்டும் பக்தா்கள் வழிபாடுகள் நடத்த முன் பகுதியில் அனுமதிக்கப்பட்டனா்.

இதற்கிடையில் தற்போது சுருளி அருவியை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா். இதுபற்றி வன அலுவலா் ஒருவா் கூறியது: கரோனா விதிமுறைகள் தொடா்பானபாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின்னா் சுருளி அருவியைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதில் குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அனுமதி, பொங்கல் பண்டிகைக்கு பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.