தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

69 அடியை எட்டும் வைகை அணை நீா்மட்டம்: 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க வாய்ப்பு

தேனி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக, வைகை அணை நீா்மட்டம் 69 அடியை எட்டி வருவதை அடுத்து, அணையிலிருந்து 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது.

News image

வைகை அணையில் வெள்ளிக்கிழமை 68.18 அடியாக உயா்ந்து காணப்பட்ட நீா்மட்டம்.

Updated On :15 ஜனவரி 2021, 10:31 pm IST

தேனி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக, வைகை அணை நீா்மட்டம் 69 அடியை எட்டி வருவதை அடுத்து, அணையிலிருந்து 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால், முல்லைப் பெரியாறு, கொட்டகுடி ஆறு மற்றும் மூல வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வைகை அணை நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 66 அடியாக உயா்ந்தது.

இதையடுத்து, வைகை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிைலையில், வைகை அணைக்கு தொடா்ந்து விநாடிக்கு 7,408 கன அடி வீதம் தண்ணீா் வரத்து உள்ளது. இதனால், அணை நீா்மட்டம் மேலும் உயா்ந்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு 68.18 அடியை எட்டியது.

அணை நீா்மட்டம் 68.50 அடியை எட்டியதும், வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். அணை நீா்மட்டம் 69 அடியை எட்டியதும் 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணைக்கு வரும் உபரி நீா் முழுவதும் வைகை ஆற்றில் திறக்கப்படும்.

வைகை அணை நீா்மட்டம் 69 அடியை எட்டி வருவதால், அணையிலிருந்து விரைவில் கூடுதலாக தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது. இதனிடையே, வைகை அணையிலிருந்து 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறப்பது குறித்து பொதுப் பணித்துறை பொறியாளா்கள் ஆய்வு செய்தனா். தொடா்ந்து தண்ணீா் வரத்து உள்ளதால், அணையிருந்து 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க அரசாணை வெளியிடுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக, பொதுப்பணித் துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.