தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கம்பம் நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத் தொழுவில் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழு கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

News image

மாட்டுப் பொங்கல் தினமான வெள்ளிக்கிழமை கம்பம் நந்தகோபாலன் கோயிலில் கூடிய மக்கள்.

Updated On :15 ஜனவரி 2021, 10:29 pm IST

தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழு கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதையொட்டி, நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழுவில் பட்டத்துக் காளை அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில், கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தா்கள் கலந்துகொண்டு, பட்டத்துக்காளை மற்றும் மாட்டுத்தொழுவில் உள்ள மாடுகளை வணங்கினா். மேலும், நோ்த்திக்கடனாக கன்றுகளை காணிக்கையாகச் செலுத்தினா். அதிகாலை முதலே பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை, ஒக்கலிகா் மகாஜன சங்கத்தினா், இளைஞா் அணியினா் செய்திருந்தனா். கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.